உலகம்செய்திகள்

டிக்டொக்கால் பறிபோனது உயிர்!

Share

டிக்டொக்கால் பறிபோனது உயிர்!

டிக்டொக் செயலில் இயங்கிகொண்டிருக்கும் யாழ்ப்பாண பெண் ஒருவரால் சுவிஸில் உள்ள நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டுக்கு சென்று தன் உயிரை மாய்ந்துகொண்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் நாட்டில் இருந்து இளைஞரொருவர் தனது தந்தைக்கு நடந்த சம்பவம் தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்து இவ்வாறான ஒரு சம்பவம் இனி யாருக்கும் நடக்க கூடாது எங்களின் விபரங்களை வெளியிட வேண்டாம் ஆனால் இந்த பிரச்சனையை வெளி உலகிற்கு தெரியப்படுத்துங்கள் என கேட்டுகொண்டுள்ளார்.

 

எனது தந்தைக்கு வயது 60 அவர் அடிக்கடி டிக் டாக்கில் இயங்கிகொண்டிருந்தார், நீண்ட காலமாக அவர் யாருடனும் சரியாக பேசவும் இல்லை பழகவும் இல்லை தன்னிச்சையாகவே சிந்தித்து கொண்டிருந்தாக மகன் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து சுவிஸில் இருந்து ஜேர்மன் நாட்டுக்கு சுற்றுலா சென்றிந்தார், அங்கு சென்றிருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உயிரை மாய்ந்துக்கொண்டுள்ளதாக செய்தி எங்களுக்கு கிடைத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஜேர்மன் நாட்டுக்கு சென்று அவரின் இறுதி கிரியைகளை செய்தாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் எங்களுக்கு ஒரு சிந்தனையாக இருந்தது அப்படியென குறையை எங்கள் தந்தைக்கு செய்யாமல் விட்டுவிட்டோம். எங்களது தந்தை யாழ்ப்பாணத்தில் இருந்து சிறு வயதிலேயே சுவிஸிற்கு இடம்பெயர்ந்து வந்து உழைத்து எங்களை ஆளாகியிருக்கிறார்.

அப்படியிருக்கையில் எங்களை அறியாமல் நாங்கள் எதாவது அவருக்கு குறை வைத்தோமா என சிந்தித்துக் கொண்டிருந்த வேளை தந்தையின் நண்பர் மூலம் அவரின் டிக் டாக்க்கை தீடிரென பரிசோதனை செய்தபோது அதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போதுதான் ஒரு அதிர்ச்சிக்கரமான உண்மை தெரியவந்துள்ளது.

தந்தைக்கும் அதேவேளை யாழ்ப்பாணத்தில் டிக் டொக்கை பயன்படுத்திக்கொண்டிருந்த யுவதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தனது தந்தையோடு குறித்த யுவதி அபாசமாக பேசியுள்ளார்.

பின்னர் தந்தையிடம் அதனை காட்டி காட்டி குறித்த யுவதி பணத்தை வாங்கிவந்துள்ளார், மேலும் தொடர்ந்து இவ்வாறு பணத்தை கேட்டு வற்புறுத்திய நிலையில் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து ஜேர்மன் நாட்டிற்கு சென்று தந்தை உயிரை மாய்ந்துகொண்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவங்கள் எல்லாம் எங்களுக்கு தெரியக்கூடாது என்று தனது நண்பரிடம் அவர் தெரிவித்திருக்கின்றார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 7
செய்திகள்அரசியல்இலங்கை

சர்வதேச குற்றவியல் விசாரணையை சரத் பொன்சேகா வலியுறுத்த வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம்...

image 1000x1000 4
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் விமானத்தில் இருந்து பிரபல பாடகர் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

டுபாய்க்குப் பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இலங்கையின் பிரபல பாடகர் சாமர ரணவக்க என்பவர்...

image 1000x1000 3 1
செய்திகள்இலங்கை

பாடசாலை செல்லாத கோபம்: மாணவியைத் தாக்கிய அதிபர் மீது காவல்துறை விசாரணை

ஒரு நாள் பாடசாலைக்குச் செல்லாததால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரைத் தடியால் தாக்கியதாகக் கூறப்படும் அதிபர்...

image 1000x1000 2
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம் – பேராசிரியர் கடும் விமர்சனம்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா...