4 5 scaled
உலகம்செய்திகள்

கைகோர்ப்போம், துயர்துடைப்போம்! கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேட்டுக்கொள்கிறேன் – நடிகர் விஜய்

Share

கைகோர்ப்போம், துயர்துடைப்போம்! கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேட்டுக்கொள்கிறேன் – நடிகர் விஜய்

மீட்புப் பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உதவிகளை செய்யுமாறு, நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெருமளவில் தண்ணீரால் சூழ்ந்துள்ளன.

பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆங்காங்கே மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.

அதேபோல் சீரமைப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் மக்களுக்கு உதவிட, மீட்புப் பணிகளில் மக்கள் நிர்வாகத்தினர் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரது பதிவில், ‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ”மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இவ்வேளையில், மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில், தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். #கைகோர்ப்போம் துயர்துடைப்போம்’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...