tamilnig 1 scaled
உலகம்செய்திகள்

தாய்வான் புதிய ஜனாதிபதியாக லாய் சிங் தே: சீனா ஆதிக்கத்துக்கு அச்சுறுத்தல்

Share

தாய்வான் புதிய ஜனாதிபதியாக லாய் சிங் தே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தாய்வானில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இத் தேர்தலில் அந்நாட்டின் ஆட்சியில் உள்ள ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் லாய் சிங் தே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார்.

அவரை எதிர்த்து சீனா ஆதரவு பெற்ற தேசியவாத கட்சியை சேர்ந்த ஹவ் யொ-ஹி ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார்.

வாக்குப்பதிவு இன்று (13.1.2023) மாலை 4 மணிக்கு நிறைவடைந்த நிலையில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது

இதையடுத்து, லாய் சிங் தே தாய்வானின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கிழக்கு ஆசியாவில் பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு தாய்வான். சீனாவுக்கு அருகே அமைந்துள்ள இந்நாட்டை தனிநாடாக சீனா அங்கிகரிக்கவில்லை.

மேலும், தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்றும் சீனா கூறி வருகிறது.

தாய்வானின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாய் சிங் தே சீன எதிர்ப்பு கொள்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
19
இலங்கைசெய்திகள்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : இன்றைய நிலவரம்

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது....

16 1
உலகம்செய்திகள்

அதிரப்போகும் ஈரான் : ட்ரம்பின் அறிவிப்பால் பதற்றம்

இஸ்ரேல்(israel)-ஈரானிய(iran) போர் தொடர்பாக ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று...

18 1
இலங்கைசெய்திகள்

யாழ் – கொழும்பு விமான சேவை குறித்து வெளியான தகவல்

கொழும்பு (Colombo) – யாழ்ப்பாணம் (Jaffna) இடையே நேரடி உள்நாட்டு விமான சேவையை இயக்குவதற்கு அங்கீகாரம்...

15 1
உலகம்செய்திகள்

மொசாட் தலைமையகம் மீது தாக்குதல் : முதன்முறையாக புதிய ஏவுகணையை களமிறக்கியது ஈரான்

இஸ்ரேலிய உளவுத்துறை மையத்தை (mossad)குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் முதன்முறையாக ஒரு புதிய, கண்டறிய முடியாத ஏவுகணையைப்...