உலகம்செய்திகள்

வரியை அதிகரித்து… மீளமுடியாத சேதத்தில் தள்ளுவார்கள்: லேபர் கட்சி குறித்து ரிஷி சுனக் காட்டம்

Share

வரியை அதிகரித்து… மீளமுடியாத சேதத்தில் தள்ளுவார்கள்: லேபர் கட்சி குறித்து ரிஷி சுனக் காட்டம்

அசுர பலத்துடன் லேபர் கட்சி ஆட்சிக்கு வரும் என்றால் முதல் 100 நாட்களில் பிரித்தானியாவை மீளமுடியாமல் சேதத்தில் தள்ளுவார்கள் என ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியா தனது வரிகளையும் எல்லைகளையும் பாதுகாப்பையும் சர் கீர் ஸ்டார்மரிடம் ஒப்படைத்துவிடாது என்றும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்துள்ள ரிஷி சுனக், லேபர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் வரி உயர்வு உறுதி என்றும் சட்டவிரோத குடியேறிகளை நாட்டுக்குள் அனுமதித்து பிரித்தானியத் தெருக்களில் இனி அவர்களின் நடமாட்டம் எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வியாழக்கிழமை பிரித்தானிய மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க செல்ல உள்ள நிலையிலேயே ரிஷி சுனக் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும், லேபர் கட்சி ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது என்றார்.

லேபர் கட்சியை நம்ப முடியாது என குறிப்பிட்டுள்ள ரிஷி சுனக், நமது வரிகள், எல்லைகள் மற்றும் நமது பாதுகாப்பை அவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியை விடவும் 20 புள்ளிகள் லேபர் கட்சி முன்னிலையில் இருப்பதாலும், வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மிக மோசமான தோல்வி ஏற்படும் என குறிப்பிட்டுள்ள நிலையிலேயே ரிஷி சுனக் லேபர் கட்சி தொடர்பில் காட்டமாக விமர்சித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...