உலகம்செய்திகள்

வரியை அதிகரித்து… மீளமுடியாத சேதத்தில் தள்ளுவார்கள்: லேபர் கட்சி குறித்து ரிஷி சுனக் காட்டம்

Share

வரியை அதிகரித்து… மீளமுடியாத சேதத்தில் தள்ளுவார்கள்: லேபர் கட்சி குறித்து ரிஷி சுனக் காட்டம்

அசுர பலத்துடன் லேபர் கட்சி ஆட்சிக்கு வரும் என்றால் முதல் 100 நாட்களில் பிரித்தானியாவை மீளமுடியாமல் சேதத்தில் தள்ளுவார்கள் என ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியா தனது வரிகளையும் எல்லைகளையும் பாதுகாப்பையும் சர் கீர் ஸ்டார்மரிடம் ஒப்படைத்துவிடாது என்றும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்துள்ள ரிஷி சுனக், லேபர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் வரி உயர்வு உறுதி என்றும் சட்டவிரோத குடியேறிகளை நாட்டுக்குள் அனுமதித்து பிரித்தானியத் தெருக்களில் இனி அவர்களின் நடமாட்டம் எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வியாழக்கிழமை பிரித்தானிய மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க செல்ல உள்ள நிலையிலேயே ரிஷி சுனக் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும், லேபர் கட்சி ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது என்றார்.

லேபர் கட்சியை நம்ப முடியாது என குறிப்பிட்டுள்ள ரிஷி சுனக், நமது வரிகள், எல்லைகள் மற்றும் நமது பாதுகாப்பை அவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியை விடவும் 20 புள்ளிகள் லேபர் கட்சி முன்னிலையில் இருப்பதாலும், வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மிக மோசமான தோல்வி ஏற்படும் என குறிப்பிட்டுள்ள நிலையிலேயே ரிஷி சுனக் லேபர் கட்சி தொடர்பில் காட்டமாக விமர்சித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...