3333 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் ஆட்சியை கைப்பற்றும் லேபர் கட்சி: தோல்வி முகத்தில் அமைச்சர்கள்

Share

பிரித்தானியாவில் ஆட்சியை கைப்பற்றும் லேபர் கட்சி: தோல்வி முகத்தில் அமைச்சர்கள்

பிரித்தானியாவில் பெருவாரியான ஆசனங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றியை நோக்கி லேபர் கட்சி முன்னேறுவதாக தகவல் வெளிவருகிறது.

இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில் லேபர் கட்சி 187 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும், ரிஷி சுனக்கின் கனசர்வேட்டிவ் கட்சி 32 ஆசனங்களுடன் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தமுள்ள 650 ஆசனங்களில் 326 ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சியானது ஆட்சி அமைக்கும் என்ற நிலையில், லேபர் கட்சி 400 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றே இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் லேபர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்புக்கு வருவார் என்றே தெரிய வருகிறது. Holborn மற்றும் St Pancras தொகுதியில் தமது வெற்றியை பதிவு செய்துள்ள கெய்ர் ஸ்டார்மர், மாற்றம் இங்குதான் தொடங்குகிறது… நாம் செயல்பட வேண்டிய தருணம் இது என குறிப்பிட்டுள்ளார்.

ரிஷி சுனக் அமைச்சரவையில் பாதுகாப்புச் செயலராக இருந்த கிராண்ட் ஷாப்ஸ் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். Reform UK கட்சியின் தலைவர் Nigel Farage முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார். முன்னாள் லேபர் கட்சி தலைவரான Jeremy Corbyn வெற்றி கண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...