05
உலகம்செய்திகள்

காமேனியின் குடும்பத்தினர் வான்வழித் தாக்குதலில் பலி: ஈரானின் முக்கிய செய்தி நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

Share

ஈரான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், அந்நாட்டின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்புடைய ‘பார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம், கமேனியின் அலுவலகத்திலுள்ள நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த வான்வழித் தாக்குதலில் உச்சத்தலைவர் கமேனியும் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளன. இருப்பினும், குடும்ப உறுப்பினர்களின் மரணம் குறித்த செய்திகள் கசிந்துள்ள போதிலும், உச்சத்தலைவர் கமேனியின் நிலை குறித்து ஈரானிய அதிகாரிகள் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வமான தகவலையும் வெளியிடவில்லை. இந்த சம்பவங்கள் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...