ஈரான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், அந்நாட்டின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்புடைய ‘பார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம், கமேனியின் அலுவலகத்திலுள்ள நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த வான்வழித் தாக்குதலில் உச்சத்தலைவர் கமேனியும் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளன. இருப்பினும், குடும்ப உறுப்பினர்களின் மரணம் குறித்த செய்திகள் கசிந்துள்ள போதிலும், உச்சத்தலைவர் கமேனியின் நிலை குறித்து ஈரானிய அதிகாரிகள் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வமான தகவலையும் வெளியிடவில்லை. இந்த சம்பவங்கள் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

