5 30
இந்தியாஉலகம்செய்திகள்

64 பேரால் தவறாக நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ள சிறுமி

Share

இந்தியாவின் கேரளா பத்தனம் திட்டா மாவட்டத்தில் நான்கு வருட காலப்பகுதியில் சுமார் 64 பேரால் தாம் தவறான செயல்களுக்கு உட்படுத்தப்பட்டதாக 18 வயதான சிறுமி ஒருவர் முறையிட்டுள்ளார்.

இந்த முறைப்பாட்டை அடுத்து ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதே நேரத்தில் குற்றம் சுமத்தப்பட்ட ஆறாவது நபர் ஏற்கனவே மற்றுமொரு குற்றத்துக்காக சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் பயிற்சியாளர்கள், வகுப்பு தோழர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த சிறுமிக்கு தனிப்பட்ட தொலைபேசிகள் இல்லையென்றும், தனது தந்தையின் தொலைபேசியையே அவர் பயன்படுத்தியதாகவும், அதிலேயே தம்மை தவறான நடத்தைக்கு உள்ளாக்கினர் என்ற அவர் முறையிட்டுள்ளதாகவும் சுமார் 40 பேரின் தொடர்பு எண்களை அவர் சேமித்து வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தை பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்த சிறுவர் நலக் குழு உறுப்பினர்கள், சிறுமியின் கூற்றுகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க ஒரு உளவியலாளரிடம் ஆலோசனை பெற ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...