rtjy 170 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானிய விமானப்படையால் நடுவானில் வழிமறிக்கப்பட்ட விமானம்

Share

பிரித்தானிய விமானப்படையால் நடுவானில் வழிமறிக்கப்பட்ட விமானம்

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றை வழிமறித்த பிரித்தானிய விமானப்படை விமானங்கள், அதை பாதுகாப்பாக வேறொரு விமான நிலையத்துக்குக் கொண்டு சென்றதால் விமானப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

கென்யாவின் தலைநகர் நைரோபியிலிருந்து பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த கென்யன் ஏர்வேஸ் விமானம் ஒன்றை வழிமறித்த பிரித்தானிய விமானப்படை விமானங்கள், அதை ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு வழிநடத்தியுள்ளன.

அந்த விமானம் பிரான்ஸ் வான்வெளியில் பறக்கும் போது, பிரித்தானிய அதிகாரிகளுக்குக் கிடைத்த எச்சரிக்கையை அடுத்து, உடனடியாக பிரித்தானிய போர் விமானங்கள் அந்த விமானத்தை வழிமறித்துள்ளதாக தெரியவருகின்றது.

விமானம் தரையிறங்கியதும், ஏராளமான ஆயுதம் ஏந்திய பொலிஸார் விமானத்தை சூழந்துகொள்ள, பயணிகள் குழப்பமடைந்துள்ளார்கள்.

இதேவேளை அந்த விமானம் வழிமறிக்கப்பட்டு ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

எதனால் அந்த விமானம் வழிமறிக்கப்பட்டு ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

குறித்த விமானத்தில் பிரச்சினை ஏற்பட்டால் மற்ற விமானங்களுக்கும், அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு அந்த விமானம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு போன்ற அபாயம் இல்லை என்றும், விமானத்திலிருந்த சில பயணிகள் தொடர்பில் எச்சரிக்கை கிடைத்ததாலேயே பொலிஸார் விமானத்தை தரையிறக்கி சோதனை நடத்தியதாகவும் கென்யா விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...