4 2
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் குழப்பம்: துப்பாக்கிச்சூடு : சிறையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்

Share

பாகிஸ்தானின்(pakistan) கராச்சியில் நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அதி உயர்பாதுகாப்பு கொண்ட சிறையில் இருந்து 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

கராச்சியில் திடீரென நிலநடுக்கம் எற்பட்டதை அடுத்து அங்கு பல பகுதிகளில் குழப்பம் நிலவியது. அதன் தொடர்ச்சியாக கராச்சியில் உள்ள அதி உயர் பாதுகாப்பு கொண்ட மாலிர் சிறையிலும் குழப்பம் வெடித்தது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 1000க்கும் மேற்பட்ட கைதிகள் அறைகளில் இருந்து பிரதான வாயிலுக்கு அழைத்து வரப்பட்டனர். ஏராளமானோர் ஒரே இடத்தில் கூடி இருக்க, அவர்களில் ஒரு குழுவினர் திடீரென சிறை வாயிலை திறந்து கொண்டு தப்பிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் மூண்டது. அங்கே வைக்கப்பட்டு இருந்த ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றிய கைதிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.

இந்த மோதலில் கைதி ஒருவர் கொல்லப்பட, 3 சிறைத்துறை அதிகாரிகள், ஒரு காவலர் படுகாயம் அடைந்தனர். வன்முறையை தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைச்சாலை சுவரை உடைத்துக் கொண்டு தப்பியோடினர்

தப்பிய கைதிகளில் பலர் கராச்சி நகரின் வீதிகளில் உலாவ தொடங்கினர். இதை தொடர்ந்து, அவர்களை தேடும் பணியில் இறங்கிய அதிகாரிகள் கிட்டத்தட்ட 75 கைதிகளை சிறைபிடித்தனர். தப்பிய பலரில் பெருமளவானோர் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்து வருபவர்கள்.

நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து தணிக்கை செய்யப்பட்டு கைதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் போகுவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...