6 7
உலகம்செய்திகள்

தோல்விக்கு பின்னர் கமலா ஹரிஸ் ஆற்றிய முதல் உரை

Share

தோல்விக்கு பின்னர் கமலா ஹரிஸ் ஆற்றிய முதல் உரை

மெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், தனது ஆதரவாளர்களை விரக்தி அடைய வேண்டாம் என மற்றுமொரு வேட்பாளரான கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் தோல்விக்கு பின்னர் தனது ஆதரவாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாம் ஒரு இருண்ட காலத்துக்குள் நுழையப்போவதாக பலர் உணரும் நிலையில், அமெரிக்கர்களின் நலனுக்காக அது அவ்வாறு இருக்காது என தான் நம்புவதாக கமலா ஹரிஸ் கூறியுள்ளார்.

முக்கிய 7 மாநிலங்களில் 5இல் வெற்றி பெற்றுள்ளதோடு இன்னும் அறிவிக்கப்படாத நெவாடா மற்றும் அரிசோனா ஆகிய மாநிலங்களிலும் ட்ரம்ப் முன்னிலை வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், ட்ரம்ப் சிறப்பான ஒரு வெற்றியை அடைந்திருப்பதாகவும் கமலா ஹரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் அமெரிக்க செனட்டின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....