7 1 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலுக்கு கவலை தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ

Share

இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலுக்கு கவலை தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ

ரஃபாவில் இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதற்கு அந்நாட்டு அமைச்சரிடம் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கவலை தெரிவித்தார்.

தெற்கு காஸா நகரமான ரஃபாவில் இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து இஸ்ரேலிய அமைச்சர் பெஞ்சமின் காண்ட்ஸ் உடன் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விவாதித்தார்.

அப்போது அவர் இஸ்ரேல், காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள நிலைமை குறித்து பேசியதாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ‘சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது மற்றும் தேவையானது என ட்ரூடோ தெரிவித்தார். ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, பணயக்கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கனடாவின் நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

காஸாவில் இருந்து கனேடியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெளியேறுவதற்கு வசதியாக, இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆதரவின் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து ஜஸ்டின் ட்ரூடோ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘காசா மற்றும் மேற்குக் கரையில் நிலவும் நிலைமை பற்றி, இன்று இஸ்ரேல் அமைச்சர் பெஞ்சமின் காண்டஸுடன் பேசினேன்.

ரஃபாவில் இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதல்களைப் பற்றி நான் கவலை தெரிவித்தேன். மேலும் நீடித்த அமைதியைப் பாதுகாப்பதற்கான இரு நாடுகளின் தீர்வை நோக்கிய முயற்சிகளை புதுப்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினேன்’ என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...