3 4 scaled
உலகம்செய்திகள்

பிரின்ஸ் எட்வர்ட் தீவுக்கான புதிய செனட்டரை நியமித்த ஜஸ்டின் ட்ரூடோ: வெளியிட்ட அறிக்கை

Share

பிரின்ஸ் எட்வர்ட் தீவுக்கான புதிய செனட்டரை நியமித்த ஜஸ்டின் ட்ரூடோ: வெளியிட்ட அறிக்கை

மேரி ராபின்சனை பிரின்ஸ் எட்வர்ட் தீவுக்கான புதிய செனட்டராக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கனேடிய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக விவசாயிகள் அமைப்பின் துணைத் தலைவராக பணியாற்றும் மேரி ராபின்சன், பிரின்ஸ் எட்வர்ட் தீவின் செனட்டராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ‘மேரி ராபின்சன் விவசாயத் துறையில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தலைவர். அவர் ஒரு பெருமைமிக்க அட்லாண்டிக் கனேடியன். பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள 6வது தலைமுறை பண்ணை மற்றும் விவசாய வணிகமான ராபின்சன் குழுமத்தின் நிர்வாக பார்ட்னர் ஆக உள்ளார்.

மேரி கனேடிய விவசாயக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மற்றும் அந்தப் பதவியை வகித்த முதல் பெண்மணி ஆவார்.

அவர் கனடா முழுவதும் விவசாயத்தில் பெண்களுக்கு ஒரு உத்வேகமான தலைவராக பணியாற்றுகிறார்’ என கூறப்பட்டுள்ளது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதிவில், ‘இன்று, நாடாளுமன்றத்தின் புதிய சுதந்திரமான செனட்டராக மேரி ராபின்சனை வரவேற்கிறோம்.

விவசாயம் மற்றும் வணிகத்தில் அவரது அனுபவம் செனட்டிற்கு ஒரு முக்கியமான முன்னோக்கி கொண்டு வரப்போகிறது. அவருடன் பணிபுரிய ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...