R 14
உலகம்செய்திகள்

கனடா சென்றதும் கணவனைக் கழற்றிவிட்ட இந்தியப் பெண்: பொலிசார் அதிரடி

Share

கணவனுடைய செலவில் கனடா சென்ற இந்தியப் பெண் ஒருவர், கனடாவில் படிப்பு முடிந்ததும், கணவனுடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டுள்ளார்.

இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்தவர் அம்ரிக் சிங். 2015ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், தனது மகனான ஜக்ரூப் சிங்கிற்கு, ஜாஸ்மின் கௌர் என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்துள்ளார்.

டிசம்பரில் ஜாஸ்மின் கனடா செல்ல, இரண்டு ஆண்டுகள் அவருடைய படிப்பிற்காக ஜக்ரூப் குடும்பத்தினர் பணம் அனுப்பிவைத்துள்ளார்கள்.

படிப்பு முடிந்ததும், கணவர் குடும்பத்துடனான உறவைத் துண்டித்துள்ளார் ஜாஸ்மின். ஆகவே, தங்களை அவர் ஏமாற்றிவிட்டதாக ஜக்ரூப் குடும்பத்தினர் பொலிசில் புகாரளிக்க, 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஜாஸ்மின் மீது மோசடி, நம்பிக்கை துரோகம் முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதுடன், அவர் இந்தியா வந்ததும் கைது செய்வதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஜாஸ்மின் படிப்பிற்காக 28 லட்ச ரூபாய் செலவு செய்ததாக ஜக்ரூப் குடும்பத்தினர் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில், தனது சகோதரியின் திருமணத்துக்காக கடந்த வாரம் இந்தியா வந்துள்ளார் ஜாஸ்மின். 9ஆம் திகதி டெல்லி விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கியதும், பொலிசார் அவரைக் கைது செய்துள்ளார்கள்.

10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட ஜாஸ்மின், காவலில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணையின்போது, தனது படிப்புக்காக தனது கணவர் குடும்பம் தனக்கு 14 லட்ச ரூபாய் அனுப்பியதாக கூறியுள்ளார் அவர்.

இனி பெண்கள் இப்படி மோசடியில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே தான் புகாரளித்ததாக அம்ரிக் சிங் கூறியிருந்த நிலையில், தற்போது ஜாஸ்மின் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தனக்கு தகவல் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...