27 3
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பிற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் வாழ்த்து!

Share

டொனால்ட் ட்ரம்பிற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் வாழ்த்து!

இஸ்ரேல் பிரதமரால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அந்நாட்டு புதிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமரால் நேற்றைய தினம் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்ட யோவ் கெல்லன்டின் பதவிக்கு இஸ்ரேல் காட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் இஸ்ரேல் காட்ஸ் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு பின்வருமாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதற்கு வாழ்த்துகள்.

நாங்கள் ஒன்றாக அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணியை வலுப்படுத்துவோம்.

பணயக்கைதிகளை மீட்டெடுப்போம், மேலும், ஈரான் தலைமையிலான தீய அச்சை முறியடிக்க உறுதியாக நிற்போம்’’ என கூறியுள்ளார்.

பெஞ்சமின் நெதன்யாகுவின் அறிவிப்பின் பிரகாரம் யோவ் கெல்லன்டின் நேற்ற பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அவரது செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாததால் பதவி நீக்கம் செய்வதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நெதன்யாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த சில மாதங்களில் நம்பிக்கை இழந்துவிட்டேன். இதனால் தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரை அப்பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளேன்” என கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
09 3
செய்திகள்உலகம்

வட்ஸ்அப் வெப் சேவையில் திடீர் முடக்கம்: ஐபோன் பயனர்கள் கடும் அவதி!

உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் இன்று திடீர்...

08 3
செய்திகள்இலங்கை

குற்றவாளிகளைத் தேடி: சிவப்பு அறிவித்தல் இன்றி 14 பேர் நாட கடத்தல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவித்தல்கள் (Red Notice) இன்றி, இதுவரை 14 சந்தேக நபர்களை...

06 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒரே நாளில் 549 பேர் கைது: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் போக்குவரத்து விதிமீறல்களும் அடக்கம்!

இலங்கை பொலிஸாரினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது,...

05 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ‘பொடி லெசி’: விசாரணைகளுக்காக காலி குற்றத்தடுப்புப் பிரிவில் ஒப்படைப்பு!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (பிப்ரவரி 27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாரிய அளவிலான...