வாக்னர் கூலிப்படை தலைவருக்கு ஜோ பைடன் எச்சரிக்கை
உலகம்செய்திகள்

வாக்னர் கூலிப்படை தலைவருக்கு ஜோ பைடன் எச்சரிக்கை

Share

வாக்னர் கூலிப்படை தலைவருக்கு ஜோ பைடன் எச்சரிக்கை

வாக்னர் கூலிப்படை தலைவரை கவனமாக இருக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை செய்தியொன்றினை வழங்கியுள்ளார்.

ஐரோப்பா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட நிலையில் ஜோ பைடன் வாக்னர் கூலிப்படை தலைவர் தொடர்பில் தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.

கடந்த மாதம் ஆயுதக்கிளர்ச்சி தோல்வியில் முடிந்த நிலையில், வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்யாவிலிருந்து வெளியேறி பெலாரஸ் நாட்டில் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், எவ்ஜெனி பிரிகோஜின் மீண்டும் ரஷ்யாவிற்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியானது.

இருப்பினும், உறுதியான தகவல் எதுவும் வெளிவராத நிலையில், அவர் இரகசிய சிறையில் தள்ளப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில்,வாக்னர் கூலிப்படை தலைவரின் பாதுகாப்பு தொடர்பில் ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடவுளுக்கு மட்டுமே தெரியும், எவ்ஜெனி பிரிகோஜின் தற்போது எங்கிருக்கின்றார் என்பது. அவரது நிலையில் நான் இருந்திருந்தால், கண்டிப்பாக எனக்கு அளிக்கப்படும் உணவு முதற்கொண்டு நான் கவனமாக இருப்பேன் எனவும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...