6 15
உலகம்செய்திகள்

அதிக விடுமுறை பெற்ற ஜனாதிபதியாக வரலாற்றில் பதிவான பைடன்

Share

அதிக விடுமுறை பெற்ற ஜனாதிபதியாக வரலாற்றில் பதிவான பைடன்

அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் (Joe Biden) தனது 4 வருட பதவிக்காலத்தில் 532 விடுமுறை நாட்களை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது ஒரு சராசரி அமெரிக்க அலுவலக ஊழியர், 48 ஆண்டுகளில் எடுக்கும் சராசரி விடுமுறை நாட்களுக்கு சமனானது என கணிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவில் ஒரு அலுவலக ஊழியர் வருடத்திற்கு சராசரியாக 11 விடுமுறை நாட்களை எடுத்து கொள்ள முடியும்.

 

இருப்பினும், 81 வயதான பைடன், தனது 1326 நாட்கள் பதவிக்காலத்தில் இருந்து 532 நாட்களை விடுமுறைக்காக செலவளித்துள்ளார். இது அவரது பதவிக்காலத்தில் 40 வீதம் ஆகும்.

 

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாகவும், பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில் இருக்கும் நிலையிலும் ஜனாதிபதி இத்தனை நாட்கள் விடுமுறை எடுப்பது ஏற்கத்தக்கது என பைடனுக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

இந்நிலையில், அண்மையில் டெலவேரில் உள்ள ரெஹோபோத் கடற்கரையில் ஓய்வு எடுத்துக்கொண்டமை அவர் எடுத்து கொண்ட 16ஆவது தொடர் விடுமுறை என்று குடியரசுக் கட்சியின் தேசியக் குழு வெளிப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, அமெரிக்காவின் வரலாற்றில் மிகக்குறைந்த அளவில் பணியாற்றிய ஜனாதிபதி என்ற பெயரை பைடன் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
25 68f7986211c31
செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை: மேலதிக ஆசனப் பிரச்சினைக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஆஜர்!

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை இடைக்காலத்...

articles2FFRfdZpigOe1FxwuUE5O6
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ். மற்றும் கிளிநொச்சியில் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ், கிளிநொச்சியில் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட...

25 68f843287a66a
செய்திகள்இலங்கை

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் தேசிய மக்கள் சக்தி தீவிரம் – தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் தயார்!

வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர...

IMG 0949
செய்திகள்உலகம்

தென் கொரியாவில் வசிக்கும் தெவிநுவர பிரதான கடத்தல்காரர்: போதைப்பொருள் வலையமைப்பு குறித்து தீவிர விசாரணை!

மாத்தறை – தெவிநுவர பிரதேசத்தில் செயல்படுவதாகக் கூறப்படும் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் தற்போது...