tamilni Recovered 6 scaled
உலகம்செய்திகள்

இனி இஸ்ரேல் -ஹமாஸ் போர் உக்கிரமடையும்… ஆயுதக் குவியல்களுடன் புறப்படும் ஜோ பைடன்

Share

இனி இஸ்ரேல் -ஹமாஸ் போர் உக்கிரமடையும்… ஆயுதக் குவியல்களுடன் புறப்படும் ஜோ பைடன்

கை நீட்டும் தொலைவில் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு புறப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இனி, இஸ்ரேல் – ஹமாஸ் போர் இறுகும் என்றே நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கின்றனர். ஹமாஸ் படையினரை மொத்தமாக அழிக்க இஸ்ரேல் பிரதமர் சூளுரைத்துள்ள நிலையில், அந்த நாட்டுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஜோ பைடன் இஸ்ரேல் புறப்படவிருக்கிறார்.

இந்த நிலையில், தமது மக்களை பாதுகாக்கும் பொருட்டு இஸ்ரேலுக்கு இனி என்ன தேவை என்பதை நேரிடையாக தெரிந்து கொள்ள ஜோ பைடன் விரும்புவதாக அமெரிக்க வெளிவிவகார செயலர் ஆண்டனி பிளிங்கன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

மேலும், பொதுமக்களின் உயிரிழப்பைக் குறைக்கும் வகையிலும், ஹமாஸுக்குப் பயனளிக்காமல் காசாவில் மனிதாபிமான உதவிகளைச் செயல்படுத்தும் வகையிலும் இஸ்ரேல் எவ்வாறு செயல்படும் என்பதை தெரிந்துகொள்ள இந்த வாய்ப்பை ஜனாதிபதி ஜோ பைடன் பயன்படுத்துவார் எனவும் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தங்கள் ஆயுத பலத்தை அதிகரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மட்டுமின்றி, ஈரான் மற்றும் பிற ஈரான் ஆதரவு குழுக்கள் ஹமாஸ் ஆதரவாக மோதலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலும் அமெரிக்கா செயல்பட உள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது 2,000 துருப்புகள், 2,400 கடற்படை சிறப்பு வீரர்கள் மற்றும் 12 போர் கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, தகவல் தெரிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் போரில் களமிறங்கும் வகையில் 2000 வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்கா திங்களன்று அறிவித்திருந்தது.

பொதுவாக இதுபோன்ற சூழலில் 96 மணி நேர அவகாசம் எடுத்துக் கொள்ளும் அமெரிக்கா, தற்போது 24 மணி நேரம் போதுமானது என தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஒரே நேரத்தில் இஸ்ரேல் மற்றும் உக்ரைன் போர்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்க கூடாது என்ற கோரிக்கையை புறந்தள்ளிய ஜோ பைடன், உலகில் மட்டுமல்ல, வரலாற்றிலேயே நாம் தான் பலம் மிகுந்த நாடு.

நம்மால் இந்த இரு போர்களையும் கவனித்துக் கொள்ள முடியும் என்றார் ஜோ பைடன். இஸ்ரேல் – ஹமாஸ் போரில் அமெரிக்கா வெளிப்படையாக களமிறங்கியிருப்பதால் இனி வரும் நாட்களில் போரின் உக்கிரம் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...