tamilni Recovered 6 scaled
உலகம்செய்திகள்

இனி இஸ்ரேல் -ஹமாஸ் போர் உக்கிரமடையும்… ஆயுதக் குவியல்களுடன் புறப்படும் ஜோ பைடன்

Share

இனி இஸ்ரேல் -ஹமாஸ் போர் உக்கிரமடையும்… ஆயுதக் குவியல்களுடன் புறப்படும் ஜோ பைடன்

கை நீட்டும் தொலைவில் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு புறப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இனி, இஸ்ரேல் – ஹமாஸ் போர் இறுகும் என்றே நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கின்றனர். ஹமாஸ் படையினரை மொத்தமாக அழிக்க இஸ்ரேல் பிரதமர் சூளுரைத்துள்ள நிலையில், அந்த நாட்டுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஜோ பைடன் இஸ்ரேல் புறப்படவிருக்கிறார்.

இந்த நிலையில், தமது மக்களை பாதுகாக்கும் பொருட்டு இஸ்ரேலுக்கு இனி என்ன தேவை என்பதை நேரிடையாக தெரிந்து கொள்ள ஜோ பைடன் விரும்புவதாக அமெரிக்க வெளிவிவகார செயலர் ஆண்டனி பிளிங்கன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

மேலும், பொதுமக்களின் உயிரிழப்பைக் குறைக்கும் வகையிலும், ஹமாஸுக்குப் பயனளிக்காமல் காசாவில் மனிதாபிமான உதவிகளைச் செயல்படுத்தும் வகையிலும் இஸ்ரேல் எவ்வாறு செயல்படும் என்பதை தெரிந்துகொள்ள இந்த வாய்ப்பை ஜனாதிபதி ஜோ பைடன் பயன்படுத்துவார் எனவும் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தங்கள் ஆயுத பலத்தை அதிகரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மட்டுமின்றி, ஈரான் மற்றும் பிற ஈரான் ஆதரவு குழுக்கள் ஹமாஸ் ஆதரவாக மோதலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலும் அமெரிக்கா செயல்பட உள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது 2,000 துருப்புகள், 2,400 கடற்படை சிறப்பு வீரர்கள் மற்றும் 12 போர் கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, தகவல் தெரிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் போரில் களமிறங்கும் வகையில் 2000 வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்கா திங்களன்று அறிவித்திருந்தது.

பொதுவாக இதுபோன்ற சூழலில் 96 மணி நேர அவகாசம் எடுத்துக் கொள்ளும் அமெரிக்கா, தற்போது 24 மணி நேரம் போதுமானது என தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஒரே நேரத்தில் இஸ்ரேல் மற்றும் உக்ரைன் போர்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்க கூடாது என்ற கோரிக்கையை புறந்தள்ளிய ஜோ பைடன், உலகில் மட்டுமல்ல, வரலாற்றிலேயே நாம் தான் பலம் மிகுந்த நாடு.

நம்மால் இந்த இரு போர்களையும் கவனித்துக் கொள்ள முடியும் என்றார் ஜோ பைடன். இஸ்ரேல் – ஹமாஸ் போரில் அமெரிக்கா வெளிப்படையாக களமிறங்கியிருப்பதால் இனி வரும் நாட்களில் போரின் உக்கிரம் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...