tamilni 399 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலில் இருந்து சீனாவுக்கு சென்ற ஜிம் லுவாண்டா கப்பல் கடத்தல்: செங்கடலில் அத்துமீறும் ஹவுதி படையினர்

Share

இஸ்ரேலில் இருந்து சீனாவுக்கு சென்ற ஜிம் லுவாண்டா கப்பல் கடத்தல்: செங்கடலில் அத்துமீறும் ஹவுதி படையினர்

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை மீண்டும் சீனாவுக்கு பயணம் செய்த ஜிம் லுவாண்டா என்ற கப்பலை கடத்தியுள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவித்து ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை செங்கடல் பகுதியில் வைத்து சிறைப்பிடித்தனர்.

மேலும் இரு தினங்களுக்கு முன்பு செங்கடல் பகுதிக்கு ரோந்துக்கு சென்ற அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஆளில்லாத ட்ரோன் தாக்குதலை ஹவுதி படையினர் முன்னெடுத்தனர்.

ஆனால் அமெரிக்க கடற்படை துரிதமாக செயல்பட்டு அத்தனை தாக்குதலுக்கு களமிறக்கப்பட்ட அனைத்து ட்ரோன்களையும் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர்.

கடத்தல் இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து சீனாவுக்கு செங்கடல் வழியாக பயணம் செய்த ஜிம் லுவாண்டா கொள்கலன் கப்பலை ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை கடத்தியுள்ளது.

இதன் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான கடல் வழி முற்றுகையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முன்னெடுக்கின்றனர் என்பது தெளிவாக தெரியவருகிறது.

ஹவுதி படையினரால் கடந்த 3 நாட்களில் கடத்தப்பட்ட அல்லது தாக்கப்பட்ட இஸ்ரேலுடன் தொடர்புடைய 3வது கப்பல் இதுவாகும்.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...