12 36
உலகம்செய்திகள்

புலம்பெயர்தல் பின்னணி கொண்ட அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி: இந்திய வம்சாவளியினரும் கூட

Share

புலம்பெயர்தல் பின்னணி கொண்ட அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி: இந்திய வம்சாவளியினரும் கூட

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

பதவியேற்கும் முன்பும், பதவியேற்ற பின்னும், புலம்பெயர்தலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது குறித்தே பேசிக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப்.

இந்நிலையில், ட்ரம்பின் மனைவியும் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்தான் என்னும் ரீதியில் செய்திகள் வெளியாகிவருகின்றன,

விடயம் என்னவென்றால், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியும் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்தான்.

அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி, அதாவது, அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான JD வேன்ஸின் மனைவியான உஷா சிலுக்குரி இந்திய பெற்றோருக்கு பிறந்தவர் ஆவார்.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உஷாவின் தந்தையான சிலுக்குரி ராதாகிருஷ்ணாவும் தாய் லக்‌ஷ்மியும் 1980களில் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்கள்.

JD வேன்ஸின் இளமைப்பருவம் மிகவும் பயங்கரமானது. அவரது தாய் போதைக்கு அடிமையானவர். அதனால் குடும்பத்தில் வறுமையும் அடிதடியுமாக அவரது இளமைப் பருவம் கழிந்தது.

அப்படிப்பட்ட சூழலில்தான் யேல் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது உஷாவை சந்தித்தார் JD வேன்ஸ்.

முதன்முறையாக அவர் உஷாவின் பெற்றோரை சந்தித்தபோது, அவர் அந்த வீட்டில் கண்ட காட்சி அவரது மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டதாம்.

ஆம், எப்போது பார்த்தாலும் அடிதடியும் சண்டையும் நிலவும் வீட்டில் வாழ்ந்து பழகிய JD வேன்ஸுக்கு அமைதியான, அன்பான உஷாவின் குடும்பத்தைப் பார்க்க ஆச்சரியமாக இருந்துள்ளது.

தனது சுயசரிதைப் புத்தகமான Hillbilly Elegy என்னும் புத்தகத்தில் இந்த சம்பவம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார் JD வேன்ஸ்.

அந்த புத்தகம், Hillbilly Elegy என்னும் பெயரிலேயே திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...