12 36
உலகம்செய்திகள்

புலம்பெயர்தல் பின்னணி கொண்ட அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி: இந்திய வம்சாவளியினரும் கூட

Share

புலம்பெயர்தல் பின்னணி கொண்ட அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி: இந்திய வம்சாவளியினரும் கூட

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

பதவியேற்கும் முன்பும், பதவியேற்ற பின்னும், புலம்பெயர்தலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது குறித்தே பேசிக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப்.

இந்நிலையில், ட்ரம்பின் மனைவியும் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்தான் என்னும் ரீதியில் செய்திகள் வெளியாகிவருகின்றன,

விடயம் என்னவென்றால், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியும் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்தான்.

அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி, அதாவது, அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான JD வேன்ஸின் மனைவியான உஷா சிலுக்குரி இந்திய பெற்றோருக்கு பிறந்தவர் ஆவார்.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உஷாவின் தந்தையான சிலுக்குரி ராதாகிருஷ்ணாவும் தாய் லக்‌ஷ்மியும் 1980களில் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்கள்.

JD வேன்ஸின் இளமைப்பருவம் மிகவும் பயங்கரமானது. அவரது தாய் போதைக்கு அடிமையானவர். அதனால் குடும்பத்தில் வறுமையும் அடிதடியுமாக அவரது இளமைப் பருவம் கழிந்தது.

அப்படிப்பட்ட சூழலில்தான் யேல் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது உஷாவை சந்தித்தார் JD வேன்ஸ்.

முதன்முறையாக அவர் உஷாவின் பெற்றோரை சந்தித்தபோது, அவர் அந்த வீட்டில் கண்ட காட்சி அவரது மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டதாம்.

ஆம், எப்போது பார்த்தாலும் அடிதடியும் சண்டையும் நிலவும் வீட்டில் வாழ்ந்து பழகிய JD வேன்ஸுக்கு அமைதியான, அன்பான உஷாவின் குடும்பத்தைப் பார்க்க ஆச்சரியமாக இருந்துள்ளது.

தனது சுயசரிதைப் புத்தகமான Hillbilly Elegy என்னும் புத்தகத்தில் இந்த சம்பவம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார் JD வேன்ஸ்.

அந்த புத்தகம், Hillbilly Elegy என்னும் பெயரிலேயே திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...