11 24
உலகம்செய்திகள்

பணம் கொடுத்து அரிசி வாங்காத ஜப்பானிய அமைச்சர் பதவி விலகினார்

Share

ஜப்பானின் விவசாய அமைச்சர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஜப்பானில் தற்போது, முக்கிய தானியங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.அத்துடன் விலையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தாம் ஒருபோதும் அரிசியை கொள்வனவு செய்ததில்லை என்ற அவரின் கூற்றே, இந்த பதவி விலகலுக்கு காரணமாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கட்சி கருத்தரங்கில் கருத்து தெரிவித்த டகு எட்டோ, தனது ஆதரவாளர்கள் எப்போதும் தனக்கு அரிசியை பரிசாக வழங்கி வருகின்றனர், எனவே தாம் அரிசியை விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை என்று கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்து உடனடியாகவே, பொதுமக்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், நுகர்வோர் உயர்ந்து வரும் அரிசி விலையால், சிரமப்படும் நேரத்தில் தாம் பொருத்தமற்ற கருத்து ஒன்றை தெரிவித்தமையை, அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

அத்துடன், பிரதமர் அலுவலகத்தில் தனது பதவி விலகல் கடிதத்தை அவர் இன்று ஒப்படைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 68308d9c71c6a
இலங்கைசெய்திகள்

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின்...

25 68308f63a7a09
இலங்கைசெய்திகள்

ஏழு வயது சிறுமியை தவறான செயலுக்கு உட்படுத்திய முதியவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்...

25 683094aa5d831
உலகம்செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக 50 சதவீத வரி விதித்த ட்ரம்ப்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 சதவீத வரி...

25 68309c4654a51
உலகம்செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா பேரின் மிகமுக்கிய ஒப்பந்தம் நடைமுறைக்கு

உக்ரைன் மற்றும் ரஷ்யா இரு தரப்பிலும் கைது செய்யப்பட்ட தலா ஆயிரம் பேரை விடுதலை செய்வதற்கான...