இந்தியாவை ஆண்ட பிரித்தானிய மண்ணில் ஒலித்த ஜன கண மன!
உலகம்செய்திகள்

இந்தியாவை ஆண்ட பிரித்தானிய மண்ணில் ஒலித்த ஜன கண மன!

Share

இந்தியாவை ஆண்ட பிரித்தானிய மண்ணில் ஒலித்த ஜன கண மன!

200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பிரித்தானிய மண்ணில் இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கண மன’ இன்று பாடப்பட்டது.

‘ஜன கண மன’ எப்பொழுது கேட்டாலும் ஒவ்வொரு இந்தியரின் உள்ளமும் பொங்கும். இது நாட்டின் மீதான அன்பையும் பற்றையும் குறிக்கிறது. இது சாதாரணமாக வந்துவிடாவில்லை, தொழிலுக்காக இந்தியா வந்து இங்குள்ள செல்வங்களைப் பார்த்து பேராசைப்பட்டு, இந்தியர்களை அடிமையாக்கி 200 ஆண்டுகாலம் ஆண்ட வெள்ளையர்களை விரட்டியடித்து சுதந்திரம் பெற்றோம். அதனால் இந்தியர்களுக்கு சுதந்திர தினம் என்பது மிகப்பாரிய விடியம்.

இந்தியாவை எந்த நாடு ஆட்சி செய்ததோ, அதே நாட்டில் இந்தியர்களுக்கு உயர் பதவிகள் கிடைத்தன. மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவின் பிரதமரானார். இந்தியர்கள் எங்கு குடியேறினாலும், இந்திய வேர்கள் அவர்கள் மனதில் எப்போதும் இருக்கும்.

இந்தியா தனது 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், இரண்டு நூற்றாண்டுகள் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் மண்ணில் இந்தியாவின் சுதந்திரக் கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுகின்றன.

100 இசைக்கலைஞர்கள் இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கண மன‘ பாடினர். பிரித்தானிய மண்ணில் ‘ஜன கண மன’ படும் உற்சாகத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்திய இசையமைப்பாளர், மூன்று முறை ‘கிராமி விருது’ வென்ற ரிக்கி கேஜ் அதை செய்தார். 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் இந்த ‘ஜன கண மன’ வீடியோ வெளியிடப்பட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தில் உணர்ச்சிவசப்படும் ரிக்கி கேஜ், “லண்டனில் உள்ள புகழ்பெற்ற ‘அபே ரோட் ஸ்டுடியோஸ்’ (Abbey Road Studios in London) அரங்கில் ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவைச் சேர்ந்த 100 கலைஞர்கள் கொண்ட குழுவுடன் ஜன கண மன பாடலைப் பதிவு செய்தேன். இந்திய தேசிய கீதத்தை பதிவு செய்த மிகப்பெரிய இசைக்குழு இதுவாகும். ஆச்சரியமாக வெளிவந்தது. பாடலின் முடிவில் என் உச்சந்தலை சிலிர்த்தது. இந்திய இசையமைப்பாளராக சிறந்த அனுபவம் பெற்றதாக அவர் கூறினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...