கீழே விழுந்த தேசிய கொடி! அடிக்க கை ஓங்கிய திமுக எம்.எல்.ஏ
உலகம்செய்திகள்

கீழே விழுந்த தேசிய கொடி! அடிக்க கை ஓங்கிய திமுக எம்.எல்.ஏ

Share

கீழே விழுந்த தேசிய கொடி! அடிக்க கை ஓங்கிய திமுக எம்.எல்.ஏ

கொடியேற்றும் போது, தேசியக்கொடி கீழே அறுந்து விழுந்ததால் அருகில் உள்ளவரை அடிக்க கை ஓங்கிய தமிழக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகனின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

75 -வது சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடி வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையிலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலும் தேசியக்கொடி ஏற்றினர்.

மேலும், தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தலைமையில் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் கலந்து கொண்டார்.

அங்கு, கும்பகோணம் 8-வது பட்டாலியன் என்சிசி கமாண்டிங் ஆபிசர் கர்னல் எஸ்.சந்திரசேகரன் மற்றும் திமுக எம்.எல்.ஏ இருவரும் இணைந்து கொடி ஏற்ற முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தேசியக்கொடி அறுந்து விழுந்தது.

இதனைத்தொடர்ந்து, தேசியக்கொடி அறுந்து விழுந்ததால் அருகில் உள்ளவரை பார்த்து திமுக எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் கை ஓங்கினார்.

இதனால் அருகில் இருந்தவர்கள் தேசியக்கொடியை மீண்டும் கயிற்றில் கட்டி ஏற்றினர். தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....