7 2
உலகம்செய்திகள்

இந்த ஆண்டில் இலட்சக்கணக்கான விசாக்களை வழங்கவுள்ள ஐரோப்பிய நாடு

Share

இந்த ஆண்டில் 1,65,000 வேலை விசாக்களை வழங்குவதற்கு இத்தாலி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கூடுதலாக 10,000 விசாக்களை பராமரிப்பு பணியாளர்களுக்காக ஒதுக்க இத்தாலி தீர்மானித்துள்ளதோடு பணியாளர்களுக்கான அதிக வாய்ப்புகள் இத்தாலியில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இத்தாலியில் தொழிலாளர் பற்றாக்குறை, முதியோர் அதிகரிப்பு, பிறப்பு வீதத்தில் குறைவு போன்ற காரணங்களால் வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை ஈர்ப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், கட்டிடக்கலை தொழிலாளர்கள், பொறியாளர்கள், உணவக பணியாளர்கள், சமையலர்கள், ஹோட்டல் ஊழியர்கள், மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு நிபுணர்கள், பயிர் உற்பத்தி மற்றும் கடற்றொழில் போன்ற துறைகளில் இத்தாலியில் வேலைவாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, சீசனல் அல்லாத வேலை விசா(Non-seasonal work visa) சீசனல் வேலை விசா(Seasonal Work Visa), பராமரிப்பு பணியாளர் விசா (Caregiver Visa), சுயதொழில் விசா (Self-Employment Visa) மற்றும் ‘EU Blue Card’ போன்ற விசா வகைகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கமைய, இத்தாலியில் உள்ள வேலை வழங்குநரின் அனுமதியை பெற்று இத்தாலி தூதரகத்தில் விண்ணப்பித்து விசாவினை பெற்றுக் கொள்ள முடியும்.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...