4 19
உலகம்செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை! புடினின் அறிவிப்புக்காக காத்திருக்கும் இஸ்தான்புல்

Share

இஸ்தான்புல்லில் நாளை நடைபெறவிருக்கும் ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்க மாட்டார் என்று உக்ரைனின் அரசாங்க சார்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் செய்தித்தாள் ஒன்று, புடினின் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ், பேச்சுவார்த்தையில் மாஸ்கோவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று கூறியதையடுத்து குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், துருக்கியில் கீவ் மற்றும் மொஸ்கோ இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்தார்.

இதனையடுத்து வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாகக் கூறியிருந்தாலும் , புடின் கலந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கிரெம்ளின் இதுவரை அமைதியாக இருந்து வருகிறது.

மாஸ்கோ தனது குழு உறுப்பினர்களின் பெயரை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இதன்படி துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை அங்காராவில் சந்திப்பதை ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் புடின் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டால் தானும் எர்டோகனும் இஸ்தான்புல்லுக்கு பயணிக்கத் தயாராக இருப்பதாகக் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...