tamilni 107 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி

Share

இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி

இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மிக நீண்ட காலமாக மோதல் நிலவி வருகின்றது.

இதற்கமைய பாலஸ்தீனர்களிடம் இருந்த காசா மலைக்குன்று அடங்கிய பகுதியை, 2007ல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 6ஆம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது, 20 நிமிடங்களில், 5,000 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்செலுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்படி, நேற்றுவரை நடந்த தாக்குதலில் 900 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் ஹமாஸ் தரப்பிலும் பலர் பலியாகியுள்ளனர்.

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இன்றும் இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் ஜாவத் அபு ஷாமாலா உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மரணத்தை இஸ்ரேல் இராணுவ அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இதற்கமைய கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அமைச்சர், அந்த அமைப்பின் அரசியல் ஆலோசகராகவும், நிதி திரட்டுபவராகவும் இருந்துள்ளார்.

மேலும், அவரது மரணம் ஹமாஸ் அமைப்புக்கு பின்னடைவாக இருக்கலாம் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...