rtjy 133 scaled
உலகம்செய்திகள்

பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது: ஹமாஸ் எச்சரிக்கை

Share

பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது: ஹமாஸ் எச்சரிக்கை

பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டால் பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது என ஹமாஸ் படைப்பிரிவுகளின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று எதுவும் இல்லை. இஸ்ரேல், தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அது பணயக்கைதிகளின் மரணத்திற்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதை தொடர்ந்து, ஹமாசை அடியோடு ஒழிப்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது.

இந்த போர் 2 மாதங்களை கடந்து நீண்டு வருகிறது.

சர்வதேச நாடுகளின் முயற்சியால் காசாவில் 7 நாட்கள் போர் நிறுத்தப்பட்ட நிலையில், அதன் பின்னர் காசா மீதான போரை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்தது.

மேலும், தெற்கு காசாவை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் மிகவும் ஆக்ரோஷமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், காசாவில் உள்ள போராளிக் குழுவை ஒழிக்க நினைக்கும் இஸ்ரேலின் நோக்கம் தோல்வி அடையும் என்று ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக, படைப்பிரிவுகளின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா கூறுகையில், “காசா போராளிக் குழுவை ஒழிப்பதற்கான இஸ்ரேலின் நோக்கம் தோல்வி அடையும். இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல் அல்லது நேரடி இராணுவ நடவடிக்கைகள் பணயக்கைதிகளை விடுவிக்காது.

பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டால் பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது. பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று எதுவும் இல்லை.

இஸ்ரேல், தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அது பணயக்கைதிகளின் மரணத்திற்கு வழிவகுக்கும்.” என்றார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...