tamilni 284 scaled
உலகம்செய்திகள்

இனி உக்கிரமாக இருக்கும்… காஸா மக்களுக்கு அதிர்ச்சியளித்த இஸ்ரேல் ராணுவம்

Share

இனி உக்கிரமாக இருக்கும்… காஸா மக்களுக்கு அதிர்ச்சியளித்த இஸ்ரேல் ராணுவம்

இரண்டு வாரத்தில் பாலஸ்தீன மக்களின் இறப்பு எண்ணிக்கை 4,500 நெருங்கிய நிலையில், காஸா மீது இன்று முதல் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிடப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் இஸ்ரேலியப் படைகள் தோராயமாக ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பாலஸ்தீனிய குழந்தையைக் கொன்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகளின் உதவிப் பணியாளர்கள் குழு காஸாவின் பேரழிவு நிலைமையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

மட்டுமின்றி, இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல் தொடங்கிய பின்னர், இதுவரை கட்டிட இடிபாடுகளில் சிக்கி 600 சிறார்கள் மாயமாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டுக்கு அசைக்க முடியாத ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பாலஸ்தீன மக்களின் அழுகுரலை உலக நாடுகள் புறக்கணிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடும் போராட்டத்திற்கு பின்னர் ராஃபா எல்லை திறந்துவிடப்பட்டுள்ளது. அத்துடன் காஸா மக்களுக்கான 20 லொறி நிவாரணப் பொருட்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காஸா பகுதி மக்களின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டால், இந்த 20 லொறி நிவாரணம் என்பது கடலில் விழுந்த துளிக்கு சமம் என உலக சுகாதார அமைப்பின் முதன்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஒரு துளி, வரும் நாட்களில் பாயும் உதவி நதியாக மாறும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அக்டோபர் 7 முதல் கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குறைந்தது 1,782 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை மட்டும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு 41 பாலஸ்தீனியர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது.

 

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...