tamilni 42 scaled
உலகம்செய்திகள்

9ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை பலிகொண்ட இஸ்ரேல் யுத்தம்

Share

9ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை பலிகொண்ட இஸ்ரேல் யுத்தம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான போர் தொடங்கிய தினத்தில் இருந்து இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன் நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போர் தொடங்கி இதுவரையான நாட்களில் 9,061 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறையை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் போர் மூண்டது. இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 3 வாரங்களில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துச் செல்கின்றது.

உயிரிழந்துள்ள 9ஆயிரத்திற்கு மேற்பட்டோரில் இதில் 18 வயதிற்கு உட்பட்ட 3,760 சிறுவர்களும் உள்ளடங்குவர்.

இதேவேளை, இந்த யுத்தத்தில் இஸ்ரேல் தரப்பில் இருந்து 1,400 பேர் உயிரிழந்துள்ளனர்.

போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 100இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் ரபா எல்லை வழியாக வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்றையதினம் இஸ்ரேல் தரைவழிப்படைகள் நேற்று காசாவை நோக்கி மேலும் முன்னேறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...