4 40
உலகம்செய்திகள்

ஒன்றரை வருடங்களுக்கு பின் அமைதிநிலை! இஸ்ரேல் விதித்துள்ள நிபந்தனை

Share

ஒன்றரை வருடங்களுக்கு பின் அமைதிநிலை! இஸ்ரேல் விதித்துள்ள நிபந்தனை

ஏறத்தாழ ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கிடையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், 33 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் விடுதலைக்கு பதிலாக 1,890 பலஸ்தீனிய பணயக்கைதிகளை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

எனினும், விடுதலை செய்யவுள்ள கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வெளியிடாமல், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க மாட்டோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கிடையில் நாளை(19.01.2025) முதல் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட உள்ளது.

இதனையொட்டி, இந்த கைதிகளின் பரிமாற்றம் இடம்பெற உள்ளதாக போர்நிறுத்த நடுவராக செயற்படும் எகிப்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு 251 பேர் பணயக்கைதிகளாக காசாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதனையடுத்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஹமாஸ் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் தாக்குதலில் 46,800 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதல்களின் விளைவாக பலஸ்தீனியர்கள் தமது சொந்த இடங்களை இழந்து, ஒன்றரை வருடங்களாக பதுங்குக் குழிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

உணவு, தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து வரும் பலஸ்தீனியர்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், தற்காலிகமாக அவர்களின் சாதாரண வாழ்வுக்கு திரும்பவுள்ளனர்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...