4 40
உலகம்செய்திகள்

ஒன்றரை வருடங்களுக்கு பின் அமைதிநிலை! இஸ்ரேல் விதித்துள்ள நிபந்தனை

Share

ஒன்றரை வருடங்களுக்கு பின் அமைதிநிலை! இஸ்ரேல் விதித்துள்ள நிபந்தனை

ஏறத்தாழ ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கிடையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், 33 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் விடுதலைக்கு பதிலாக 1,890 பலஸ்தீனிய பணயக்கைதிகளை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

எனினும், விடுதலை செய்யவுள்ள கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வெளியிடாமல், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க மாட்டோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கிடையில் நாளை(19.01.2025) முதல் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட உள்ளது.

இதனையொட்டி, இந்த கைதிகளின் பரிமாற்றம் இடம்பெற உள்ளதாக போர்நிறுத்த நடுவராக செயற்படும் எகிப்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு 251 பேர் பணயக்கைதிகளாக காசாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதனையடுத்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஹமாஸ் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் தாக்குதலில் 46,800 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதல்களின் விளைவாக பலஸ்தீனியர்கள் தமது சொந்த இடங்களை இழந்து, ஒன்றரை வருடங்களாக பதுங்குக் குழிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

உணவு, தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து வரும் பலஸ்தீனியர்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், தற்காலிகமாக அவர்களின் சாதாரண வாழ்வுக்கு திரும்பவுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...