15 12
உலகம்செய்திகள்

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக அதி முக்கிய படையை களமிறக்கும் இஸ்ரேல்

Share

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக அதி முக்கிய படையை களமிறக்கும் இஸ்ரேல்

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான போரில் வடக்கு எல்லை பிராந்தியத்தில் “கோலானி படையணியை”(Golani Brigade) களமிறக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலிய இராணுவத்தின் ஐந்து காலாட்படை படைப்பிரிவுகளில் கோலானி படையணி சக்திவாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதன் பிறகு, தற்போது அந்த அமைப்பு தலைமை இல்லாத அணியாக காணப்படுகின்றது.

எனினும் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா மேற்கொள்ளும் தாக்குதல் அதன் திறன்களை மேலும் எடுத்துக்காட்டும் விதமாக இருப்பதாக போரியல் வல்லுநர்களால் கூறப்படுகிறது.

இந்நிலையில், காசாவில் போர்நிறுத்தம் ஏற்படும் வரையில், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவதை ஹிஸ்புல்லா நிறுத்தாது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான எச்சரிக்கைகளை கையாளும் நோக்குடன் இஸ்ரேல் கோலானி படையணியை லெபனான் எல்லையில் களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இஸ்ரேலின் ஹைஃபா நகருக்கு தெற்கே கோலானி படையணியின் இராணுவத்தளமொன்றை நிறுவுவதற்கும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...