15 12
உலகம்செய்திகள்

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக அதி முக்கிய படையை களமிறக்கும் இஸ்ரேல்

Share

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக அதி முக்கிய படையை களமிறக்கும் இஸ்ரேல்

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான போரில் வடக்கு எல்லை பிராந்தியத்தில் “கோலானி படையணியை”(Golani Brigade) களமிறக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலிய இராணுவத்தின் ஐந்து காலாட்படை படைப்பிரிவுகளில் கோலானி படையணி சக்திவாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதன் பிறகு, தற்போது அந்த அமைப்பு தலைமை இல்லாத அணியாக காணப்படுகின்றது.

எனினும் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா மேற்கொள்ளும் தாக்குதல் அதன் திறன்களை மேலும் எடுத்துக்காட்டும் விதமாக இருப்பதாக போரியல் வல்லுநர்களால் கூறப்படுகிறது.

இந்நிலையில், காசாவில் போர்நிறுத்தம் ஏற்படும் வரையில், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவதை ஹிஸ்புல்லா நிறுத்தாது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான எச்சரிக்கைகளை கையாளும் நோக்குடன் இஸ்ரேல் கோலானி படையணியை லெபனான் எல்லையில் களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இஸ்ரேலின் ஹைஃபா நகருக்கு தெற்கே கோலானி படையணியின் இராணுவத்தளமொன்றை நிறுவுவதற்கும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...