5 8
உலகம்செய்திகள்

பதிலடி தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்! ஈரானின் விமான நிலையங்கள் மீது சரமாரியான தாக்குதல்

Share

ஈரானில் விமான நிலையங்களை தாக்கி F-14 போர் விமானம் மற்றும் ஏவுகணை களஞ்சியங்களை அழித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை(IDF) தெரிவித்துள்ளது.

இன்றையதினம்(23)ஈரானின் மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதியிலுள்ள குறைந்தது ஆறு விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு விமானப்படை தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

இதில் ஒரு எரிபொருள் நிரப்பும் விமானம், F-14, F-5 மற்றும் AH-1 விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய ஈரானில் உள்ள தரையிலிருந்து–தரைக்கு ஏவப்படக்கூடிய ஏவுகணை களஞ்சியங்களும் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலும் ஈரானும் இடையே ஏற்பட்ட மோதல் 11ஆவது நாளாக தொடர்ந்து வருவதாகவும், இந்த பகுதி தாக்குதலுக்கான பகுதி எனவும் கூறப்பட்டுள்ளது.

மேற்கு ஈரானில் உள்ள கெர்மான்ஷா பகுதியை குறிவைத்து, 15இற்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இஸ்ரேலுக்கு எதிராக இலக்குகள் கொண்ட ஏவுகணை களஞ்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.

“ஈரானின் இராணுவத் திறன்களை சீர்குலைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், ஈரான் வான்வெளியில் ஆட்சி நிலைநாட்டும் நோக்கில் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன,” என IDF டெலிகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

IDF தனது X கணக்கில் வெளியிட்ட தகவலின் படி, இந்த தாக்குதல்கள் மூலம் தரையிறக்க பாதைகள், அடிநிலை பாதுகாப்பு கூடங்கள், எரிபொருள் நிரப்பும் விமானம், மற்றும் F-14, F-5, AH-1 விமானங்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...