3 8
இலங்கைசெய்திகள்

வேலைக்குச் சென்ற பெண்ணை கழுத்தறுத்து படுகொலை செய்த மர்ம நபர்! அதிகாலையில் நேர்ந்த பரிதாபம்

Share

கொஸ்கம பகுதியில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை குறித்தப் பெண் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்கம பகுதியில் உள்ள ரப்பர் தொழிற்சாலைக்கு அருகில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும், இந்த படுகொலையை செய்த கொலையாளி தொடர்பில் தகவல்கள் எதும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அவிஸ்ஸாவெல்ல – புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பெண் ரப்பர் தொழிற்சாலையில் பணி புரிவதாகவும், இன்று அதிகாலை வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது அவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...