tamilnaadi 14 scaled
உலகம்செய்திகள்

காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் : 200 பேர் பலி

Share

காசா மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தொடர் தாக்குதலில் 24 மணி நேரத்தில் 200 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகர் மீது கடுமையான குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் காசாவுக்குள் நுழைந்து ஹமாஸ் சுரங்கப்பாதை வளாகத்தை அழித்துள்ளது.

மேலும், பல உடல்கள் சுற்றுப்புறங்களின் இடிபாடுகளில் புதைந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுவதோடு மத்திய காசாவில் உள்ள நுசிராட் முகாம் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக மருத்துவர்கள் மற்றும் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் வீடு ஒன்றின் அடித்தளத்தில் உள்ள சுரங்கப்பாதை வளாகத்தை அழித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளதோடு, அல்-குத்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்த பாலஸ்தீன ஊடகவியலாளர் ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து கொல்லப்பட்டாதாகவும் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் 7ஆம் திகதி தொடங்கிய ஹமாஸ் – இஸ்ரேல் போர் முடிவுக்கு வராத நிலையில் இதுவரை இஸ்ரேலியர்கள் 1,200 பேர் உயிரிழந்துள்ளதோடு, இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காசாவில் 21,507 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!

பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

MediaFile 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை: போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...