tamilni 426 scaled
உலகம்செய்திகள்

மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்! பத்திரிகையாளர் உட்பட 6 பேர் மரணம்

Share

மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்! பத்திரிகையாளர் உட்பட 6 பேர் மரணம்

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்லில் பாலஸ்தீன ஊடகவியலாளர் உட்பட 6 பேர் பலியாகினர்.

ஹமாஸ், இஸ்ரேல் இடையே தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் காசாவின் வெவ்வேறு பகுதிகளில் ஆறு பேர் உயிரிழந்தனர் மற்றும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காசாவின் சுகாதார அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது.

பலியான 6 பேரில் ஊடகவியலாளர் அப்துல்லா டார்விஷும் (Abdullah Darwish) ஒருவர். இவர் அல் அக்ஸா (Al-Aqsa) என்ற செயற்கைக்கோள் தொலைக்காட்சியின் புகைப்படக் கலைஞர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார்.

போர் தொடங்கிய கடந்த 7 வாரங்களில் பாலஸ்தீனியரான அப்துல்லா டார்விஷுடன் சேர்த்து மொத்தம் 71 ஊடகவியலாளர்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...