16 17
உலகம்செய்திகள்

ஈரானை இலக்குவைத்த விசேட பாதுகாப்பு கூட்டத்துக்கு தயாராகும் இஸ்ரேல்

Share

ஈரானை இலக்குவைத்த விசேட பாதுகாப்பு கூட்டத்துக்கு தயாராகும் இஸ்ரேல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்வரும் சில மணித்தியாலங்களில் பாதுகாப்புக் கூட்டத்தை நடத்துவார் என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சந்திப்பானது, ஈரான் மீதான எதிர்ப்பை அடிப்படையாக கொண்டமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டு, தேசிய பாதுகாப்பு செயளாலர் இடாமர் பென்-க்விர் போன்ற தரப்புடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஹிஸ்புல்லாவுடனான மோதல் இப்போது ஈரானுடனான போரின் ஒரு பகுதியாக கட்டமைக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேலின் – சிசேரியாவில் உள்ள நெதன்யாகுவின் இல்லத்தை நேற்று குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை ஒரு படுகொலை முயற்சியாக இஸ்ரேல் கருதுகிறது.

மேலும், ஈரான் அதன் பின்னால் இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சுமத்துகிறது. எனினும், இந்த சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று ஈரான் கடுமையாக மறுத்துள்ளது.

Share
தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...