rtjy 247 scaled
உலகம்செய்திகள்

காசா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம்

Share

காசா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம்

இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரேலானது தற்போது தரைவழி தாக்குதலுக்கு தயாராகிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா எல்லையில் இஸ்ரேல் இராணுவத்தினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருவதோடு எல்லைக்கோடு பகுதியில் சிறப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காசா மீது அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து சுமார் 14 நாட்களாக இரு நாடுகளும் அடுத்தடுத்து பதிலடி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை இஸ்ரேலில் தரப்பில் 1,400 பேரும் காசாவில் 3,478 பேரும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

முன்னதாக ஏவுகணைகள், குண்டுகள் மூலம் பெரும்பாலும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தங்களின் அடுத்தகட்ட தாக்குதலாக தரைவழித்தாக்குதல் இருக்கும் என இஸ்ரேல் அறிவித்திருந்தது.

இந்நிலையில் காசா எல்லையில் சிறப்புப் படையினர் தற்போது ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை தரைவழித்தாகுதலுக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...