24 662c0fcdb35e4
உலகம்செய்திகள்

ஹமாஸை ஒழிக்க இஸ்ரேலின் இறுதி திட்டம்

Share

ஹமாஸை ஒழிக்க இஸ்ரேலின் இறுதி திட்டம்

ஹமாஸ் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் முனைப்புக் காட்டும் நிலையில், தனது கடைசி குறிக்கோளாக காசாவின் ரஃபா நகரை நிரணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு காசாவில் உள்ள இந்த ரஃபா நகரம் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் என்பதால் இது பேரழிவை ஏற்படுத்தலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஹமாஸுக்கு எதிரான போர் ரஃபாவிற்குள் நுழையாமல் முடிவுக்கு வராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

ஆனால், ரஃபா மீது நடத்தப்படும் தாக்குதல் மிக மோசமான சூழலை உருவாக்கும் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

கடந்தாண்டு ஆரம்பித்த இஸ்ரேல் காசா யுத்தத்தால் இதுவரை பல லட்சம் பேர் காசாவில் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

அப்படி வெளியேறியவர்களில் பல லட்சம் பேர் ரஃபாவுக்கு தான் சென்றுள்ளநிலையில் ரஃபாவில் தாக்குதல் நடந்தால் அது மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ரஃபா மீதான தாக்குதல் திட்டத்தைப் பொதுவெளியில் சொல்லி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், இப்போது அங்கு இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸை முற்றிலும் ஒழிப்பதையே இஸ்ரேல் தனது இலக்காக வைத்துள்ளது. நான்கு ஹமாஸ் பட்டாலியன்களின் தாயகமாக ரஃபா உள்ளது.. இதன் காரணமாகவே இஸ்ரேல் ரஃபா நகரைத் தாக்குவதில் குறியாக இருக்கிறமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...