தெற்கு காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்: நெருக்கடியில் இஸ்ரேலிய பிரதமர்

26 3

தெற்கு காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்: நெருக்கடியில் இஸ்ரேலிய பிரதமர்

காசா பகுதியில் இஸ்ரேல் (Israel) தமது இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

காசா பகுதியை இஸ்ரேலில் இருந்து பிரிக்கும் கெரெம் ஷாலோம் எல்லைப் பகுதியில் மட்டுமே போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்குமென இஸ்ரேல் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு காசாவில் மனிதாபிமான உதவிக் குழுக்கள் உள் நுழைவதற்கு அனுமதி வழங்கியே இந்த போர்நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபாவில் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று இஸ்ரேலிய இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, பாலஸ்தீனத்திற்கு எதிராக தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்ரேல் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) பதவி விலகுமாறும் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் (united state of America) நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version