rtjygg 1 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் ஆயுதங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் அனுமதியில்லை

Share

இஸ்ரேல் ஆயுதங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் அனுமதியில்லை

அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு செய்துள்ள நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் அவ் ஆயுதங்களை பயன்படுத்த ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கத்தார் பாதுகாப்பு அமைச்சரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ள ஈரானிய பிரதான தளபதி முகமது பாகேரி குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை மாற்றுவதைத் தடுக்குமாறு பிராந்திய நாடுகளை பாகேரி வலியுறுத்தியுள்ளார்.

ஹமாஸ் படைகளுடனும் ஈரானுடனும் நெருக்கமான தொடர்பை கொண்டுள்ள கத்தார் நாட்டில் தான் மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளம் அமைந்துள்ளது.

முன்னதாக காசாவிற்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மற்ற தரப்பினரையும் மோதலில் ஈடுபடுத்த வழிவகுக்கும் என தளபதி முகமது பாகேரி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், இஸ்ரேல் நிர்வாகத்தின் குற்றங்களின் தொடர்ச்சி, சில நாடுகளின் நேரடி ஆதரவு மற்றும் உதவி ஆகியவை நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள பாகேரி, ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக மேலும் சிலர் களமிறங்க வாய்ப்பை ஏற்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.

இஸ்ரேலின் போர் குற்றங்களை தடுக்க உடனடியாக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் எனவும் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலின் இந்த கண்மூடித்தனமான போக்கு எதிர்ப்பு குழுக்களிடமிருந்து ஏதேனும் எதிர்வினை ஏற்பட வாய்ப்பாக அமையும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...