24 66105b8b7aa01
உலகம்செய்திகள்

போர்க்குற்றங்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் : ஐ.நாவில் தீர்மானம்

Share

போர்க்குற்றங்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் : ஐ.நாவில் தீர்மானம்

காசா பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு இஸ்ரேலை பொறுப்பேற்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இது திரிபுபடுத்தப்பட்ட அறிக்கை என்று கூறி இஸ்ரேல் அந்த பிரேரணையை நிராகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக 28 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், அமெரிக்கா, ஜேர்மனி உள்ளிட்ட 6 நாடுகள் தமது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 13 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து சபையின் பல பிரதிநிதிகள் கரகோஷம் எழுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காசா பகுதியில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான தாக்குதல்கள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து கவுன்சில் கவனம் செலுத்தி, இஸ்ரேலுக்கான அனைத்து ஆயுத விற்பனையையும் நிறுத்த அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நீண்டகாலமாக இஸ்ரேல் மக்களை கைவிட்டு ஹமாஸை பாதுகாத்து வருவதாக இஸ்ரேலின் நிரந்தர பிரதிநிதி மைரவ் அய்லன் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...