4 3 scaled
உலகம்செய்திகள்

உலகில் எங்கு இருந்தாலும் ஹமாஸ் தலைவர்களை வேட்டையாட திட்டம்..! மொசாட் தயாரித்துள்ள பெயர்கள்

Share

உலகில் எங்கு இருந்தாலும் ஹமாஸ் தலைவர்களை வேட்டையாட திட்டம்..! மொசாட் தயாரித்துள்ள பெயர்கள்

ஹமாஸ் தலைவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் நிறைவுக்கு வந்து இருக்கும் நிலையில், இரு படைகளுக்கும் இடையிலான தாக்குதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த தாக்குதலில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு இடையிலான போர் நிறைவடைந்த பிறகு, ஹமாஸ் தலைவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களை வேட்டையாடி கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் படையினரை கொலை செய்யும் இந்த திட்டத்திற்கு ‘ஆபரேஷன் ராத் ஆப் காட்” போன்ற திட்டத்தை ஒப்புதல் அளிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரும்புவதாக தெரியவந்துள்ளது.

அவற்றில் குறிப்பாக துருக்கி மற்றும் லெபனான் நாடுகளில் உள்ள ஹமாஸ் தலைவர்களை கொல்ல இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் திட்டத்தை வகுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொசாட் படையினர் தயாரித்து வரும் இந்த பட்டியலில், இஸ்மாயில் ஹனியே, முகம்மது டெய்பி, யாயா சின்வார் மற்றும் காலித் மஷால் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் இஸ்மாயில் ஹனியே பாலஸ்தீனத்தின் முன்னாள் பிரதமர்(2006) என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இஸ்ரேல் மற்றும் மொசாட்டின் இந்த திட்டம் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என மொசாட் அமைப்பின் முன்னாள் இயக்குநர் இப்ரெய்ம் ஹலெவி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...