6 5
உலகம்செய்திகள்

அடுத்தடுத்து காவு வாங்கும் இஸ்ரேல் : பலியான புதிய தலை – பின்வாங்குமா ஈரான்

Share

மத்திய தெஹ்ரானில் (Tehran) இலக்கு வைக்கப்பட்டு நடாத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ஈரானின் முக்கிய தளபதி மேஜர் ஜெனரல் அலி ஷத்மானி (Ali Shadmani) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF)அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் மொசாட் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஜெனரல் அலி ஷத்மானி ஈரானின் மிக உயர்ந்த பதவியில் இருந்த இராணுவ அதிகாரி எனவும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Sayyid Ali Hosseini Khamenei) நெருங்கிய இராணுவ ஆலோசகர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெப்டினன்ட் ஜெனரல் கோலமாலி ரஷீத் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அலி ஷத்மானி கொள்ளப்பட்டுள்ளார்.

ஜூன் 13 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை குறி வைத்து தாக்குதல் மேற்கொண்டது.

அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களுக்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பதிலளித்தது ஈரான்.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக தொடரும் ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமான உலக நாடுகள் அச்சத்தை எதிர் நோக்கியுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் மூத்த இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் அலி ஷத்மானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மேலும் மூத்த இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் அலி ஷத்மானியின் மரணத்தை ஈரான் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

 

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...