வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான நாடு
உலகம்செய்திகள்

வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான நாடு

Share

வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான நாடு

நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறைக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டமானது ஆயிரக்கணக்கான மக்களை வீதியில் இறங்கி போராட வைத்துள்ளது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிய நீதித்துறை மறுசீரமைப்புக்கான முதல் மசோதாவுக்கு இஸ்ரேல் பாராளுமன்றம் திங்களன்று ஒப்புதல் அளித்தது.

சில அரசாங்க முடிவுகளை நியாயமற்றதாகக் கருதினால் அவற்றை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களை இந்த மசோதா கட்டுப்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே, சுமார் 95% மருத்துவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் இஸ்ரேலிய மருத்துவ சங்கம் 24 மணி நேர போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக கூறியது.

ஆனால், ஜெருசலேமில் மருத்துவ பராமரிப்பு மற்றும் நாடு முழுவதும் அவசர சிகிச்சைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விளக்கமளித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிய சட்டத்திருத்தமனாது இறுதி வாக்கெடுப்பில் 64-0 என வெற்றிபெற்றுள்ளது.

இந்த நிலையில், திங்கட்கிழமை இரவு ஜெருசலேமில் உள்ள பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள தெருக்களில் சுமார் 20,000 மக்கள் நீலம் மற்றும் வெள்ளை கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உரிமைகளை விட்டுத்தர முடியாது எனவும் சர்வாதிகாரிக்கு அடிபணிய முடியாது எனவும் நெதன்யாகுவிடம் இருந்து இஸ்ரேலை காப்பாற்றுங்கள் எனவும் மக்கள் முழக்கமிட்டனர்.

கூட்டத்தை கலைக்க பொலிசார் தண்ணீர் பீச்சியடித்ஹ்துள்ளதுடன், கண்ணீர் குண்டுகளையும் வீசினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கலில் 19 பேர்கள் வரையில் கைதாகியுள்ளதாக தகவல் வெளியானது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...