1 3
உலகம்செய்திகள்

உயிர் பயம் இருந்தால்… எஞ்சிய காஸா மக்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

Share

ட்ரம்பின் அமைதி ஒப்பந்தம் தொடர்பில் ஹமாஸ் படைகள் விவாதித்து வரும் நிலையில், போரில் உயிர் தப்பியுள்ள காஸா மக்களுக்கு இஸ்ரேல் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஸாவின் முதன்மை நகருக்கு மொத்த மக்களும் சென்றுவிட இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது. மேலும், காஸா சிட்டியில் இஸ்ரேல் இராணுவம் உக்கிரமான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

அதேவேளை இராணுவம் நகரத்தை மொத்தமாக சுற்றி வளைத்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உறுதி செய்துள்ளார். உயிர் பயம் இருந்தால் காஸா மக்கள் உடனடியாக வெளியேறி, ஹமாஸ் படைகளை தனிமைப்படுத்த வேண்டும் என காட்ஸ் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மட்டுமின்றி, வெளியேறாமல் தங்கியிருக்கும் அனைவரும் தீவிரவாதிகள் எனவும், தீவிரவாத ஆதரவாளர்கள் எனவும் கருதப்படுவார்கள் என்றும் அமைச்சர் காட்ஸ் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, மத்திய காஸாவை மேற்கு கடற்கரையுடன் இணைக்கும் Netzarim corridor-ஐ இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும் அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதனால், இஸ்ரேல் இராணுவத்தின் மிரட்டலுக்கு பயந்து எவரேனும் காஸா சிட்டியிலிருந்து தெற்கே வெளியேறுவார்கள் என்றால் இஸ்ரேலிய இராணுவ சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டும். அது, உயிர் பயத்தில் வெளியேறும் பாலஸ்தீன மக்களை கொத்தாக கைது செய்யும் இஸ்ரேலின் சதி திட்டம் என்றே சர்வதேச ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

ஆனால், தெற்கு காஸாவில் இருந்து வடக்கு நோக்கி மக்கள் பயணிக்க எஞ்சியுள்ள கடைசி பாதையை மூடுவதாக இராணுவம் அறிவித்துள்ள சில மணி நேரங்களில் Netzarim corridor-ஐ இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

60 வயது பாலஸ்தீனியர் ஒருவர் தெரிவிக்கையில், காஸா சிட்டியின் நிலைமை தெற்கு காஸா பகுதியின் நிலைமையிலிருந்து வேறுபட்டதல்ல என்பதால் நான் வெளியேறுவதாக இல்லை என்றார்.

இதே மன நிலையில், பெரும்பாலான காஸா மக்கள் இருப்பதால், அவர்களை தீவிரவாதிகள் என அடையாளப்படுத்தி, இஸ்ரேல் இராணுவம் படுகொலை செய்யலாம் என்ற நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.

காஸாவின் எல்லாப் பகுதிகளும் ஆபத்தானவை, குண்டுவெடிப்பு எல்லா இடங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது, இடப்பெயர்ச்சி என்பது திகிலூட்டுவதாக உள்ளது என்பதுடன் அவமானகரமானது என அந்த 60 வயது நபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரண்டாண்டு கால இஸ்ரேல் தாக்குதலில் இருந்து இதுவரை உயிர் தப்பியுள்ள அனைவரும் மரணத்தை எதிர்பார்த்தே காத்திருப்பதாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ள கருத்துகள், இஸ்ரேல் இராணுவம் போர் குற்றங்களை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார் என்றே ஹமாஸ் பதிலளித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 1
இலங்கைசெய்திகள்

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை: வெள்ளப் பகுதிகளின் கண் தொற்றுகள் பரவும் அபாயம் – மக்கள் அவதானம்!

வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் (Eye Infections) எளிதில் பரவக்கூடும்...

25 69329d0e7c401
இலங்கைசெய்திகள்

பலத்த மின்னல் எச்சரிக்கை: மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அபாயம்! பொதுமக்கள் பாதுகாப்பாய் இருக்க அறிவுறுத்தல்

பலத்த மின்னலுக்கான முன் எச்சரிக்கை அறிவிப்பை அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre –...

25 69340bc828c36
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் அதிர்ச்சி: 38 நோயாளிகளிடம் அத்துமீறிய மருத்துவர் மீது 45 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு!

பிரித்தானியாவில் மருத்துவராகப் பணியாற்றிவந்த ஒருவர், 13 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் உட்பட 38 நோயாளிகளிடம் அத்துமீறியதாக...

25 69341a3e0ac8b
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி கோமா நிலை: தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது கீழே விழுந்தாரா? முரண்பட்ட தகவல்கள்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கும் மேலாகக் கோமா...