7 3
உலகம்செய்திகள்

டசின் கணக்கானோர்… பாடசாலை கட்டிட விபத்தில் உறுதி செய்த அதிகாரிகள்

Share

இடிந்து விழுந்த இந்தோனேசிய பள்ளியின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய 91 மாணவர்களில் எவரும் உயிருடன் இல்லை என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை சிடோர்ஜோ நகரில் உள்ள இரண்டு மாடி உண்டு உறைவிடப் பள்ளி இடிந்து விழுந்தபோது நூற்றுக்கணக்கான மாணவர்கள், அவர்களில் பெரும்பாலோர் இளம் வயதினர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

அந்த விபத்தில் குறைந்தது ஐந்து மாணவர்கள் இறந்ததாகவும், சுமார் 100 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடங்கியதிலிருந்து 13 மாணவர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர், இருப்பினும் இருவர் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

தற்போது, வியாழக்கிழமை, பேரிடர் தணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், வெப்ப ட்ரோன்களைப் பயன்படுத்தியுள்ள மீட்புப் பணியாளர்கள், இடிபாடுகளில் இருந்து உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறியத் தவறிவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய 91 மாணவர்களில் எவரும் உயிருடன் இல்லை என்றே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விஞ்ஞான ரீதியாக எவரும் உயிருடன் இல்லை என்பதை உறுதி செய்ததன் பின்னர், கனரக கருவிகளைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து இன்னும் அழுகை மற்றும் அலறல் சத்தம் கேட்கிறது என்று அதிகாரிகள் புதன்கிழமை கூறியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல பாடசாலை வளாகத்தில் காத்திருக்கின்றனர், அவர்களில் பலர் தங்கள் அன்புக்குரியவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...