23 14
உலகம்செய்திகள்

லெபனான் மீது ஊடுருவ தயாராகும் இஸ்ரேல்: தீவிர கண்காணிப்பில் அமெரிக்கா

Share

லெபனான் மீது ஊடுருவ தயாராகும் இஸ்ரேல்: தீவிர கண்காணிப்பில் அமெரிக்கா

லெபனான் (Lebanon) மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் (Israel) முன்னெடுத்துள்ள தாக்குதல் சம்பவங்களை அமெரிக்க (United States) அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் முன்னெடுத்த இருவேறு நூதன தாக்குதல் சம்பவத்தால் ஹிஸ்புல்லா (Hezbollah) படைகள் மட்டுமின்றி, லெபனான் நாடும் நடுக்கத்தில் மூழ்கியுள்ளது.

தற்போதுள்ள நிலைமையில் லெபனான் மீது ஊடுருவல் நடத்தவோ அல்லது ஒரு முழுமையான படையெடுக்கவோ இஸ்ரேல் முயற்சிக்கவில்லை என்றே அமெரிக்க அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருப்பினும், ஹிஸ்புல்லா படைகள் பயன்படுத்திய பேஜர்கள் மற்றும் walkie-talkie கருவிகள் வெடித்துள்ள நிலையில், ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து பதிலடி எதிர்பார்க்கலாம் என்றே கூறப்படுகிறது.

இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இந்த தாக்குதலில் தங்களுக்கு பங்கில்லை என்றே அமெரிக்கா கூறி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்திற்கான ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் பயிற்சி என அனைத்தையும் அமெரிக்காவே இதுவரை முன்னெடுத்து வருகிறது.

லெபனானில் நடந்த தாக்குதலில் தங்களுக்கு பங்கில்லை என ஈரானிடம் (Iran) ரகசியமாக அமெரிக்கா விளக்கமளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் லெபனானில் உள்ள அமெரிக்க மக்கள் கவனத்துடன் இருக்க அழைப்பு விடுத்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 19
உலகம்செய்திகள்

சுலோவீனியாவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு: வாகனங்களுக்கு 50 லீற்றர் மாத்திரமே வழங்கக் கட்டுப்பாடு!

உக்ரைன் – ரஷ்ய போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் சங்கிலி பாதிப்பு மற்றும் எல்லை...

09 19
செய்திகள்உலகம்

ஈரானில் வரலாறு காணாத இணைய முடக்கம்: 23 நாட்களாக இருளில் மூழ்கியுள்ள 90 மில்லியன் மக்கள்!

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகளின் தாக்குதல்கள் மற்றும் உள்நாட்டுப் போராட்டங்களைத் தொடர்ந்து,...

08 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 25 கிலோ ‘பொன்கொரண்டி’ மீட்பு: சீனாவுக்குக் கடத்த முயன்றவர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் சீனாவுக்குக் கடத்த முயன்ற 25...

07 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேருந்து கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்கப் பரிந்துரை: நாளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, சாதாரண மற்றும் அதிவேக நெடுஞ்சாலை பேருந்து...