rtjy 300 scaled
உலகம்செய்திகள்

காசாவில் குண்டுவீச்சை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

Share

காசாவில் குண்டுவீச்சை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

விமானத் தாக்குதல் மூலம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரைவழித் தாக்குதலுக்கு உதவியாக காசா நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் கடந்த 24 மணி நேரத்தில் குண்டுவீச்சை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வான்வழித் தாக்குதல் மட்டுமின்றி, காசாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் இராணுவம் ஆயத்தமாக உள்ளதாக தெரியவருகிறது.

ஹமாஸ் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் இராணுவம், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 18 நாட்களாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.

ஹமாஸ் அமைப்பைக் குறிவைத்து காசா பகுதியில் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் இராணுவம் கூறினாலும், அதன் குண்டுவீச்சில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

காசா பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 704 பேர் உயிரிழந்ததாக அப்பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை 2,360 சிறுவர்கள் உட்பட மொத்தமாக 5,791 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...