rtjy 300 scaled
உலகம்செய்திகள்

காசாவில் குண்டுவீச்சை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

Share

காசாவில் குண்டுவீச்சை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

விமானத் தாக்குதல் மூலம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரைவழித் தாக்குதலுக்கு உதவியாக காசா நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் கடந்த 24 மணி நேரத்தில் குண்டுவீச்சை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வான்வழித் தாக்குதல் மட்டுமின்றி, காசாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் இராணுவம் ஆயத்தமாக உள்ளதாக தெரியவருகிறது.

ஹமாஸ் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் இராணுவம், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 18 நாட்களாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.

ஹமாஸ் அமைப்பைக் குறிவைத்து காசா பகுதியில் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் இராணுவம் கூறினாலும், அதன் குண்டுவீச்சில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

காசா பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 704 பேர் உயிரிழந்ததாக அப்பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை 2,360 சிறுவர்கள் உட்பட மொத்தமாக 5,791 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...